December 6, 2018 தண்டோரா குழு
உதகமண்டலத்தில் உருளைக்கிழங்கு ஆய்வு நிலையத்தை மூடக்கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
ஊட்டியில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மத்திய அரசு மூடக்கூடாது.மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.1957 ல் துவங்கப்பட்ட இந்த மையம்,70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தை மூடினால், தென் மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தென் மாநில விவசாயிகள் பஞ்சாபில் உள்ள ஆய்வு மையத்தை நாடும் சூழ்நிலை உருவாகும்.இந்த ஆய்வு மையத்தை மூடினால் உதகை,கிருஷ்ணகிரி,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.வட மாநில ஆய்வு மையம் உருவாக்கும் ரகங்கள் இங்கு பயன்தராது எனக் கூறியுள்ளார்.