• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முத்தலாக் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வர சட்டம் கொண்டு வருகிறது: மத்திய அரசு

November 21, 2017 தண்டோரா குழு

முத்தலாக் நடைமுறையை வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முடிவுக்குக் கொண்டு வர முடிவு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இஸ்லாமியர்கள் முறைப்படி ஒரே நேரத்தில் 3 முறை தலாக் விவகாரத்தில் வெறும் சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில், ஒரே நேரத்தில் 3 முறை தலாக் கூறும் முத்தலாக் முறையை தடுக்கும் புதியசட்டம் இயற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான புதிய சட்டத்தை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி சட்டம் கொண்டு வர மத்திய அரசு உறுதி அளித்தது.

மேலும்,நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.வழக்கமாக குளிர் கால கூட்டத் தொடர் நவம்பர் 3ம் வாரம் துவங்கி டிசம்பர் இறுதி வரை நடக்கும். எனினும், இந்த முறை அதை 10 நாட்களாக சுருக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க