• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுனாமியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

December 26, 2016 தண்டோரா குழு

சுனாமியில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோருக்கு, சென்னை மெரினா கடற்கரையில் உறவினர்கள், பொதுமக்கள் பேரணியாக சென்று கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

2004 ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக சுனாமி பேரலைகள் எழுந்து கடற்கரைப் பகுதிகளைத் தாக்கின.

தமிழகத்தில் சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது.

வீடுகளையும், உடமைகளையும் நாசமாயின.

சுனாமி தாக்குதல் நடந்து, 12 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில், மக்கள், மெழுகுவர்த்திகளை ஏந்தியும், கடலில் பால் கொட்டியும் ஆயிரக்கணக்கானோர் திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தினர். நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பிற கடற்கரை பகுதிகளிலும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதியில் 3500க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களின் அன்றாடப் பணிக்குச் செல்லவில்லை. 1500க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்பட்டன.

மேலும் படிக்க