• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவனை கடத்தி பெட்ரோல் ஊற்றி எரிப்பு

November 14, 2017 தண்டோரா குழு

திருப்பத்தூர் அருகே மர்ம நபர்கள்  பள்ளி மாணவனை கடத்தி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தாதனவலசை பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் கோவிந்தன்(14).இவர் வெங்களாபுரம் தனியார் பள்ளியில் 9வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் காலையில் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்லும் போது அவரை நேதாஜி நகர் அருகே  டாடா ஏசி வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வழிமறித்து மாந்தோப்பிற்கு தூக்கி சென்று உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

அவர்களிடம் தப்பித்த வந்த மாணவனை அருகே உள்ள ஊர்பொதுமக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமணையில் சேர்த்து உள்ளனர்.மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க