• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்மார்ட் போன்களின் விலை உயரவாய்ப்பு

February 1, 2017 தண்டோரா குழு

மத்திய பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன்களில் பொருத்தப்படும் சர்க்யூட் போர்டுகளுக்கான வரி உயர்த்தப்பட்டதால் ஸ்மார்ட் போனின் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் புதனன்று தாக்கல் செய்தார். அதில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் பிரிண்டட் சர்க்யூர்ட் போர்டுகளுக்கு (PCB) 2 சதவீத கூடுதல் வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

மேலும்,உள்நாட்டு பிசிபி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் நிதியமைச்சர் விளக்கம் அளித்தார்.

ஸ்மார்ட்போன் உற்பத்தி செலவில் பிசிபி போர்டுகளின் செலவு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் ஆகும். இன்றைய சூழலில் இந்திய சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ள பிசிபிக்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவையே. இதனால் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க