• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்மார்ட் போன்களின் விலை உயரவாய்ப்பு

February 1, 2017 தண்டோரா குழு

மத்திய பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன்களில் பொருத்தப்படும் சர்க்யூட் போர்டுகளுக்கான வரி உயர்த்தப்பட்டதால் ஸ்மார்ட் போனின் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் புதனன்று தாக்கல் செய்தார். அதில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் பிரிண்டட் சர்க்யூர்ட் போர்டுகளுக்கு (PCB) 2 சதவீத கூடுதல் வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

மேலும்,உள்நாட்டு பிசிபி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் நிதியமைச்சர் விளக்கம் அளித்தார்.

ஸ்மார்ட்போன் உற்பத்தி செலவில் பிசிபி போர்டுகளின் செலவு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் ஆகும். இன்றைய சூழலில் இந்திய சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ள பிசிபிக்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவையே. இதனால் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க