• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு

November 3, 2016 தண்டோரா குழு

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் நாள் மற்றும் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மதுக்கடைகளை மூட ஆயத் தீர்வைத் துறை உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 19ம் தேதி தமிழகத்தில் 3 தொகுதிகளிலும்,புதுச்சேரியில் 1 தொகுதியிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுசேரியில் தற்போது முதல்வராக உள்ள வி. நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இதற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

அதிமுக சார்பில் ஓம் சக்தி சேகர் போட்டியிடுகிறார். அதிமுகவிற்கு என்.ஆர். காங்கிராஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் ஓட்டுக்கள் நவம்பர் 22 ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனை முன்னிட்டு நவம்பர் 17 ம் தேதி மாலை முதல் நவம்பர் 19 ம் தேதி மாலை வரை மதுக்கடைகளை மூட புதுச்சேரி கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதே போன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு நவம்பர் 21 ம் தேதி மாலை முதல் நவம்பர் 22 ம் தேதி மாலை வரை மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க