November 15, 2017
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலைக் கொண்டிருக்கிறது.மேலும்,காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெகு தொலைவில் உள்ளதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.