• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு

December 11, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அனுமதியளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தின் ஓவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை தொடங்கலாம் என்றும், அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் உத்திரவிட்டது. இதையடுத்து, இந்த உத்திரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க இடைக்கால தடை விதித்து உத்திரவிட்டது. மேலும், எதிர் மனுதாரர் 11 வாரத்தில் விளக்கமளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க