• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப் பறந்தாலும் மக்களின் சோகம் தெரியாது – கமல்

November 22, 2018 தண்டோரா குழு

ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப் பறந்தாலும் மக்களின் சோகம் தெரியாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் களமிறங்கியுள்ளார்.புயல் பாதிக்கப்பட்ட இடங்களில்,முதல் இடமாக தஞ்சைக்கு சென்ற அவர்,பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.புயலால் ஏற்பட்ட சேதங்களையும் தனது கட்சியினருடன் சென்று பார்வையிட்டார்.

இதற்கிடையில்,நேற்று முன்தினம் தமிழக முதல்வர் பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.இதனை பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப் பறந்தாலும் மக்களின் சோகம் தெரியாது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“தரையில் கால் பாவிட,மக்களோடு மக்களாக நின்று பார்த்தால்,கேட்டால்… புரியும் சோகம்,தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது.கேட்கிறதா அரசுக்கு? அம்மையப்பன்,அம்மாபேட்டை,கோட்டூர் மக்கள்,கோபத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தபொழுது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம்,எங்களுக்கு உணவு இருக்கிறது,மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்பட வைத்தது.இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க