November 3, 2018
தண்டோரா குழு
இடைத்தேர்தலில் 20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 20 தொகுதிகளில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவகத்தில் முதலைமைச்சர்,துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,
“நடக்கவிருக்கும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் எனவே பொறுப்பாளர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.