• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பும் சசிகலா புஷ்பா

August 1, 2016 தண்டோரா குழு

தூத்துக்குடி மாவட்டம், முதலூரை அடுத்த அடையல் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா புஷ்பா. மிககுறுகிய காலத்தில் அதிமுகவில் அசுர வளர்ச்சி கண்ட இவர் தூத்துக்குடி மாவட்ட அதிமுக மகளிர் அணிச் செயளாலர்,தூத்துக்குடி நகர மேயர்,மாநிலங்களவை உறுப்பினர் எனக் கட்சிக்குள் இவரின் வளர்ச்சி வேகமாகவே இருந்து வந்தது.

தூத்துக்குடி மேயராக பதவி வகித்த போதே மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி ஆனார்,மேலும், அதிமுகவின் ராஜ்யசபா கொறடாவாகவும் அறிவிக்கப்பட்டார்.

இதையெடுத்து, திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படங்கள் சமூக வளைதலத்தில் வெளியானது. தனது ஆண் நண்பருடன் மதுபோதையில் வாட்ஸ்ஆப் உரையாடியது, விமான நிலையத்தில் திருச்சி சிவாவைக் கன்னத்தில் அறைந்தது என வரிசையாகச் சர்ச்சைகளில் சிக்கி கட்சியில் தனது செல்வாக்கை குறைத்துக்கொண்டே வந்தார் சசிகலா.

இந்நிலையில் கட்சியின் நற்பெயருக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்தும் சசிகலா புஷ்பா நீக்கப்படுவதாகக் கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.

ஆனால், தான் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனவும், தான் மிரட்டப்படுவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்கு பாதுகாப்பு தரும்படி சசிகலா புஷ்பா கண்ணீருடன் மக்களவையில் பேசினார்.

பின்னர் இது குறித்து டெல்லி செய்தியாளர்களுக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில்,சென்னை போயஸ் தோட்டத்தில் நான் ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்.வெளியில் என்னுடைய குடும்பத்தினர் காரில் அமர்ந்திருந்தனர்.

அவர்களிடம் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை எனவும் என்னுடைய வீட்டுக்குச் செல்லவும் என்னை அனுமதிக்கவில்லை எனவும் கூறினார். மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியைத் அளிக்கிறது. என்றும் இப்போது நான் சுதந்திரமாக செயல்பட முடியும் என்றும் கூறியுள்ளார். அதைபோல், என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 மாத காலமாகவே என்னை ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள். நான் ஒருபோதும் ராஜினாமா செய்யமாட்டேன். எனக்காக காங்கிரஸ், திமுக, பாஜகவினர் குரல் கொடுத்தார்கள்.

அவர்களுக்கு நன்றி என சசிகலா புஷ்பா கூறினார்.மேலும் 2020ஆம் ஆண்டு வரை தனக்கு பதவிக்காலம் உள்ளதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவிவை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று சசிகலா புஷ்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், நெல்லை அருகே உள்ள சசிகலா புஷ்பா வீடு மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையெடுத்து, தற்போது, சசிகலா விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க