• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநில இறகுப் பந்து போட்டியில் வென்றவர்களுக்கு ரூ.18லட்சம் பரிசு

July 29, 2016 தண்டோரா குழு

தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடந்த மாநில இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.

முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடந்தது.

இந்தப் போட்டியில், ஆண்கள் அணி தரப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தையும், சென்னை மாவட்டம் 2-ம் இடத்தையும், கோவை மாவட்டம் 3-ம் இடத்தையும் பிடித்தது. பெண்கள் அணி தரப்பில் மதுரை மாவட்டம் முதலிடத்தையும், காஞ்சிபுரம் மாவட்டம் 2-ம் இடத்தையும், கோவை மாவட்டம் 3-ம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசளிக்கும் விழா 28.07.2016 மாலை நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், முதல் பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.50ஆயிரமும் என மொத்தம் ரூ.18லட்சம் மதிப்பிலான பரிசுகளுக்கான காசோலைகளை வழங்கினார். மேலும், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார் பாராட்டினார்.

மேலும் படிக்க