• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

10 ஆண்டுகளாக சூரிய மின்விளக்குகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை திமுக சார்பில் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு

November 13, 2017 தண்டோரா குழு

கடந்த பத்து ஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து சூரியமின் விளக்குகள் மற்றும் சோலார்மின் விளக்குகள் சரியாகபராமரிக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து திமுக சார்பில் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை திமுக சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயனை சந்தித்து மனு அளித்தார்.

அம்மனுவில், கோவை மாநகராட்சியில் உள்ள செம்மொழி பூங்காக்கள் சரியாக பராமரிக்கப்படாமலும் பராமரிப்பு பணிக்கான ஒப்பந்த பணியாளர்கள் நிறுத்தபட்டதால் பூங்காவில் தூய்மை பணிகள் நடைபெறாமலும் புதர்மண்டி பராமரிப்பற்று உள்ளது. இதனால் சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், கொசுக்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவும் கடந்த பத்துஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து.சூரிய ஒளிமின்விளக்குகள் சரியாக பராமரிக்கபடாமல் இருப்பதாகவும் இதே போல் பலகோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சோலார் மின்விளக்குகள் சரியாக பராமரிக்கபடாமல் எரியாத நிலையில் உள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் உடனடியாக மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநகராட்சி பகுதிகளில் முடிக்கபடாமல் உள்ள சாலைப்பணி,பாதாளசாக்கடை பணி உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க