• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிரித்த முகத்துடன் மரணித்த கன்னியாஸ்திரி.

June 29, 2016 தண்டோரா குழு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்சைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி சிசிலியா மரியா(43). இவருக்குக் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் நடந்து கொண்டார். மேலும், தன்னுடைய நோய் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து இறை ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இறக்கும் தருவாயில் அருகில் இருந்த அனைவரிடமும் அனைவரும் அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறியவாறே உயிரிழந்தார்.

முகத்தில் புன்னகையுடன் உயிரிழந்த சிஸ்டர் மரியாவின் உதடுகள் பல மணிநேரம் சிரித்தபடியே இருந்தது. இதையடுத்து சிரித்த நிலையில் உயிரிழந்த அவரது புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

மேலும் படிக்க