• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்லாவில் களைக்கட்டிய பாரம்பரிய ஆட்டுச்சண்டை.

June 16, 2016 வெங்கி சதீஷ்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லா அருகே உள்ள தர்களி கிராமத்தில் தற்போது பாரம்பரிய திருவிழாவான ராமர் சண்டை எனப்படும் நரட்டி விழா நடைபெற்று வருகிறது.

இந்தவிழா அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மலை மீது உள்ள லட்சுமி நாராயணாவை தரிசித்து ஆசிபெறுவதற்கான விழாவாக பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். சிம்லாவைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் மலையடிவாரத்தில் ஒன்றுகூடி அங்கிருந்து மலைப் பயணத்தைத் தொடர்வார்கள்.

அப்போது அவர்களது பாரம்பரியத் தொழிலான ஆடுவளர்ப்பை மேம்படுத்தும் விதமாக அங்குள்ள மந்தைகளில் தங்களிடம் உள்ள வலிமையான ஆட்டை அழைத்து வந்து மற்றவர்கள் கொண்டுவரும் ஆடுகளுடன் சண்டைக்கு விடுவார்கள்.

இதில் வெற்றிபெறும் ஆட்டிற்குப் பரிசுகளும் வழங்கப்படும். இவ்வாறு செய்வதன்மூலம் தங்களது மலைப்பயணம் இனிமையாக அமையும் எனவும், கடவுளின் ஆசிவாதம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து கூறிய அப்பகுதியைச் சேர்ந்த கலா குமாரி, இந்த ஆட்டுச்சண்டை பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இதை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் குழந்தைகளும் விரும்பிப் பார்ப்போம். இது திருவிழாவின் ஒரு பகுதி எனத் தெரிவித்தார்.

இது குறித்து இந்தப் போட்டிகளை முன்னின்று நடத்தும் சேட்டன் பக்ல என்பவர் கூறும்போது, இங்கு ஆடு வளர்ப்பு தான் பிரதானத் தொழில் அதனால் அவரவர்கள் திறமைக்கு ஏற்ப ஆடுகளை வளர்கின்றனர். எனவே காலம் காலமாக இங்கு ஆட்டுச்சண்டை நடைபெற்று வருகிறது.

இதன்மூலம் அதிக வீரியம் கொண்ட ஆண் ஆடுகளை இனம்கண்டு பின்னர் இன விருத்திக்குப் பயன்படுத்துவர். இதனால் நல்ல தரமான ஆடுகள் கிடைப்பதுடன் மக்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது எனத் தெரிவித்தார்.

பழைய சடங்குகள் அனைத்தும் தடை செய்யவேண்டும் என ஒரு சிலர் கூறிவரும் நிலையில் பழைய சடங்குகள் அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்கு தான் எனப் புரிய வைக்கின்றனர் இந்த மலைவாழ் மக்கள்.

மேலும் படிக்க