• Download mobile app
14 Jun 2026, SundayEdition - 3777
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கலவரத்தில் சேதம் அடைந்த கடைகளுக்கு அரசாங்கம் நிதி வழங்க வேண்டும் உரிமையாளர்கள் கோரிக்கை

September 24, 2016 தண்டோரா குழு

கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே நிசார் என்பவருக்கு சொந்தமான செருப்பு கடையில், நேற்று நடைபெற்ற கலவரத்தில் தீ வைக்கப்பட்டது. அதில் சுமார் 17 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து நிசார் கூறுகையில் கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கொலை செய்யப்பட்டு கோவையில் பதற்ற நிலை உருவானது. இந்து அமைப்புகள் பந்த் அறிவித்திருந்தது .

இதனை அடுத்து கோவை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அதனால் நானும் எனது கடையே அடைத்து தான் வைத்திருந்தேன். சசிகுமாரின் உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட பொழுது துடியலூரில் கலவரம் வெடித்தது. இதில் பூட்டிய எனது கடையின் அடிப்பாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. தீயில் எரிந்து நாசமான பொருட்களின் மதிப்பு 17 லட்சம் ஆகும். அதற்க்கு காப்பீட்டு தொகையும் செய்யப்பட்டவில்லை . இந்த நஷ்டத்தை என்னால் ஈடுகட்டவே முடியாது. தமிழக அரசாங்கம் நிதி தந்தால் மட்டுமே இதிலிருந்து மீள முடியும் என தெரிவித்தார்.

அதே போல் அருகில் உள்ள தொலைபேசி விற்கும் கடையின் பூட்டை உடைத்து தொலைபேசிகளையும் மர்ம கும்பல் கொலை அடித்து சென்றவிட்டது.இதே போல் கலவரத்தில் சேதமடைந்த கடைகளுக்கு அரசாங்கம் நிதி வழங்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க