• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாலியல் புகாருக்கு உள்ளான மத்திய இணையமைச்சர் ராஜினாமா

October 17, 2018 தண்டோரா குழு

பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார் கூறிய நிலையில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தியாவில் #Metooஎன்னும் ஹாஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் மத்திய வெளியுறவு துறை இணை யமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது மீடூ மூலம் பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.

பத்திரிகையில் பணியாற்றிய போது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு தம்மிடம் தவறாக நடந்ததாக மத்திய அமைச்சர் அகபர் மீது, பத்திரிகையாளர் பிரியா ரமணி மீ டூ ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சியினர் குரல் எழுப்பினர்.

இதனையடுத்து,டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமைச்சர் அக்பர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில், முதன் முதலாக தன் மீது அவதூறு பரப்பிய பிரியரமணி உள்ளிட்ட சிலர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து ‘
உள்ளார். இந்நிலையில், பாலியல் புகாருக்கு உள்ளான மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

“தன் மீதான குற்றசாட்டை தனிநபராக எதிர்கொள்ளவே பதவியை ராஜினாமா செய்ததாகவும்,நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்”.

மேலும் படிக்க