November 10, 2018
தண்டோரா குழு
அரூர் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.இதற்கிடையில்,கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் மாணவியை பின்தொடர்ந்த இருநபர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதில்,படுகாயமடைந்த மாணவி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில்,இன்று மாணவி பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து,இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோட்டப்பட்டி போலீசார் தலைமறைவாகியுள்ள சதீஸ், ரமேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.