• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனை அருகே சாலையில் ஓடும் சாக்கடை நீர்

November 29, 2016 தண்டோரா குழு

கோவை அரசு பொது மருத்துவமனை வெளிப்புற பகுதியில் அரசு கலைக்கல்லூரி செல்லும் சாலையில் உள்ள சாக்கடையில் கால்வாய் அடைப்பின் காரணமாக துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையின் ஓரத்தில் கசிகிறது.

கோவை அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மருத்துவமனையின் பின்புறத்தில் கோவை அரசு கலை கல்லூரி அமைத்துள்ளது.

மருத்துவமனை வெளிப்புறப் பகுதியில் இருந்து அரசு கலைக்கல்லூரி செல்லும் சாலையில் உள்ள சாக்கடையில் கால்வாய் அடைப்பின் காரணமாக துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையின் ஓரத்தில் கசிந்து செல்கிறது. இதனால், மருத்துவமனை வளாகத்தின் அருகே சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.

இதைத் தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளனர். ஆனால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளது. எனவே, மருத்துவமனை அருகே நோய் பரவும் சூழல் உள்ளதால், இதனை விரைந்து சரிசெய்ய வேண்டும் என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க