• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் சசிகலா உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு

November 13, 2017 தண்டோரா குழு

சசிகலா குடும்பத்தினர் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை முழுமையாக நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சோதனை வரி ஏய்ப்பு புகாரின் எதிரொலியாக சசிகலா குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும்,ஜெயா டிவி அலுவலகம் மற்றும் அதற்கு தொடர்புடைய ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 160 இடங்களிலும் ஜெயா டிவிக்கு தொடர்புடைய நிறுவனங்களிலும், அதன் உரிமையாளர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிப்பார்க்கும் பணி நடந்து வருவதாகவும்,சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள் இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க