• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா புஷ்பாவைக் கைது செய்ய 6 வாரங்கள் தடை

September 26, 2016 தண்டோரா குழு

மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவருமான சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினரும்,அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவருமான சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்யும் இரண்டு பணி பெண்கள் கொடுத்த பாலியல் தொந்தரவு புகாரின் பேரில்
தூத்துக்குடி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் முறைகேடு செய்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையெடுத்து மதுரை கே.புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமைநீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வுக்கு வந்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், சசிகலா புஷ்பாவைக் கைது செய்ய 6 வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டனர். அதைபோல் சசிகலா மீதான புகார்கள் தொடர்பாக தூத்துக்குடி காவல்நிலையத்தில் அக்டோபர் 3ஆம் தேதியும், கே.புதூர் காவல்நிலையத்தில் அக்டோபர் 7ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு உத்தரவிட்டனர். மேலும், சசிகலா புஷ்பாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் தமிழகக் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க