• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார்

October 6, 2017 தண்டோரா குழு

உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராஜனை சந்திக்க சசிகலா 5 நாள் பரோலில் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

இதனால், சசிகலா பரோலில் வெளிவந்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள தனது கணவரை சந்திப்பதற்காக 15 நாட்கள் பரோல் கேட்டிருந்தார்.

இதையடுத்து சசிகலாவிற்கு 18 நிபந்தனைகளை விதித்து கர்நாடக காவல்துறை 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.இதைத்தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருந்து 233 நாட்களுக்கு பிறகு சசிகலா வெளியே வந்துள்ளார்.

பரோல் வழங்கப்பட்ட நிலையில் இன்று இரவு விமானம் மூலம் சசிகலா சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறார். சென்னைக்கு வரும் சசிகலா தியாகராய நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க