November 9, 2018 தண்டோரா குழு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.இதற்கிடையில்,படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் மற்றும் அதிமுகவின் திட்டங்கள் குறித்தும்,அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து,தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சில இடங்களில் திரையங்குகளில் வைக்கப்பட்டுள்ள விஜய்யின் பேனர்களை அதிமுக தொண்டர்கள் கிழித்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால்,சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக கூறப்பட்டது.
தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் கஷ்டபட்டு வைத்த பேனர்களை அதிமுகவினர் கிழித்தால் அவர்கள் பெரும் மனவருத்தத்தில் உள்ளனர்.இந்நிலையில் இரண்டு விஜய் ரசிகர்கள் பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில்,2 பேரும் லுங்கி கட்டிக் கொண்டு கையில் ஆளுக்கொரு வீச்சரிவாளை பிடித்தபடி நின்றிருக்கிறார்கள்.
அந்த வீடியோவில்,”ஒரு படம் வந்ததுக்கே இப்படி அள்ளு கிளம்புதே..உண்மையிலேயே அவர் அரசியலுக்கு வந்தா என்ன செய்வீங்க… அப்படி என்ன அவர் தப்பா கேட்டுட்டார்.. நியாயத்தைதானே கேட்டார்.நீங்க யாராவது ஒரு நல்லது பண்ணியிருக்கங்களா? பண்ணதெல்லாம் தப்பு… தப்பையே பண்ணிட்டு இருந்தீங்கன்னா அதைதானே படமா எடுக்க முடியும்? மொத்த விஜய் ரசிகர்களும் சேர்ந்தோம்ன்னா ஒரு அதிமுககாரனுகூட உயிரோடு இருக்க மாட்டீங்க… மரியாதையா போனா போகட்டும்னு உயிரோடு வெச்சிருக்கிறோம்.இல்லன்னா நேரா வந்து அறுத்து போய்ட்டு போயிடுவோம்.ஆனா தளபதி ரசிகர்மன்ற ஆளுங்க இப்படி பண்ணிட்டாங்களேன்னு எங்க தளபதிக்கு பேர் கெட்டு போயிடும்-னு பாக்கறோம்.அதனால அடங்கி இருக்கிறோம்.. உங்க உசிரெல்லாம் எங்க தளபதிகிட்ட இருக்குது.நாளைக்கு காசி தியேட்டராண்ட வரேன்… திரும்பவும் பேன ரை வெப்போம்.. எவனாவது கிழிச்சி பாருங்க… வாங்கடா காசி தியேட்டராண்ட… எங்க அருவாதான் பேசும்… ” இவ்வாறு பேசியுள்ளனர்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.