• Download mobile app
26 Jun 2026, FridayEdition - 3789
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா? – வரலட்சுமி சரத்குமார்

November 9, 2018 தண்டோரா குழு

ஒரு திரைப்படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா என நடிகை வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.இதற்கிடையில்,படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனால் படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில்,சர்கார் படத்திற்கு எதிராக பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் இதுதொடர்பாக வரலட்சுமி சமூக வலைத்தளத்தில் தன் கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

அதில்,ஒரு திரைப்படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா? பிரச்சினையை சரி செய்வதற்கு பதிலாக அதை மோசமாக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.ஒரு படைப்பை உருவாக்க முழு சுதந்திரம் உள்ளது என பதிவிட்டுள்ளார்.மேலும்,இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸூக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாகவும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க