November 9, 2018 தண்டோரா குழு
ஒரு திரைப்படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா என நடிகை வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.இதற்கிடையில்,படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனால் படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.
இந்நிலையில்,சர்கார் படத்திற்கு எதிராக பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் இதுதொடர்பாக வரலட்சுமி சமூக வலைத்தளத்தில் தன் கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
அதில்,ஒரு திரைப்படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா? பிரச்சினையை சரி செய்வதற்கு பதிலாக அதை மோசமாக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.ஒரு படைப்பை உருவாக்க முழு சுதந்திரம் உள்ளது என பதிவிட்டுள்ளார்.மேலும்,இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸூக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாகவும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.