• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்கார் திரைப்பட டிக்கெட் அதிக விலைக்கு விற்றால் தியேட்டர் உரிமம் ரத்து- உயர்நீதிமன்றம் அதிரடி!

November 1, 2018 தண்டோரா குழு

சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்,நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்க்கார் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.இந்நிலையில்,மதுரை மாவட்டத்தில் சில தியேட்டர்களில் சர்கார் திரைபடத்திற்கு தியேட்டர் விலையை விட பலமடங்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இவ்வழக்கினை இன்று விசாரணைக்கு கொண்டு வந்த மதுரை உயர்நீதிமன்றம்,சர்கார் திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்யவேண்டும் என்றும்,டிக்கெட் கட்டணத்தை கண்காணித்து,மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க