• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்கார் படத்துக்கு தடைவிதிக்க இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

October 25, 2018 தண்டோரா குழு

சர்கார் படத்துக்கு தடைவிதிக்க இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்,முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.மேலும் வரலட்சுமி சரத்குமார்,ராதாரவி,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது.இப்படம் வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என கூறப்பட்டது.எனினும் தீபாவளிக்கு முன்னதாக வருகிற 2–ந்தேதி சர்கார் படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

இந்நிலையில்,சர்கார் படத்தின் திரைக்கதை தன்னுடையது என்றும்,கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாகவும் கூறி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார். ராஜேந்திரன் அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டதை அடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து,சர்கார் படத்துக்கு தடை கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்றும் அக்.30க்குள் பதிலளிக்க பட தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் மற்றும் தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க