• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய காமுகன் கைது

July 30, 2016 தண்டோரா குழு

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பள்ளத்தாதனூரைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ரேகா(15)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகே உள்ள பள்ளியில் தற்போது பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததை அடுத்து பள்ளியில் இருந்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பெற்றோர் அவர் 6 மாதம் கற்பமாக இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் லோகநாதன் என்பவர் தான் கற்பத்திற்குக் காரணம் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து ரேகா வாழப்பாடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இளம்பெண்ணைக் கற்பழித்ததாக வழக்குப் பதிவு செய்த ஆய்வாளர் உமா சங்கர் விரைந்து செயல்பட்டு லோகநாதனை கைது செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க