• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சச்சின் மகளை காதலிப்பதாக தொல்லை கொடுத்த நபர் கைது

January 8, 2018 தண்டோரா குழு

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுக்கு தொலைபேசியில் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இவரது மகள் சாரா டெண்டுல்கர். இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் கிழக்கு மித்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேப்குமார் மைட்டி (32).

இவர் சமீபத்தில் மும்பையில் உள்ள தனது சகோதரரை பார்க்கசென்ற அவர், தற்செயலாக சாராவையும் பார்த்துள்ளார். அப்போதிருந்து சாரா மீது காதல் கொண்ட அவர், எப்படியோ அவரின் கைபேசி எண்ணை கண்டுபிடித்து சாராவுக்கு 20க்கும் அதிகமான முறை தொலைபேசி மூலம் தொல்லை கொடுத்துள்ளார். இதுமட்டுமின்றி அவர் சாராவை கடத்தப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சாரா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ரகசியமாக விசாரித்து வந்த போலீசார் சாராவுக்கு தொல்லை கொடுத்த அந்த நபரை மேற்குவங்கத்தில் வைத்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தான் சச்சின் மகளை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், அதனால் தான் போன் செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் சாராவின் பெயரை தனது கையில் பச்சைக்குத்தியுள்ளார். எனினும், அவருடைய குடும்பத்தினர் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும், எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க