• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய கொடியுடன் டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல்

December 1, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் புதிய கொடியுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் மறுபடியும் போட்டியிடுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அண்ணா உருவம் பொறிக்கப்படாத கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறக்கொடியுன் வந்து டி.டி.வி.தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேர்தல் ஆணையம் அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. ஆனால் அதிமுக கொடியை படுத்துவேன் எனக் கூறிய தினகரன் புதிய கொடியுடன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க