• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி. தினகரன் மீண்டும் போட்டி

November 29, 2017 தண்டோரா குழு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் மீண்டும் போட்டியிட உள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் திமுக சார்பில் மருது கணேஷ் மீண்டும் போட்டியிடவுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டது.

இந்நிலையில்,இந்த தேர்தலில் தினகரன் மீண்டும் போட்டியிட உள்ளதாக அவரது அணியினர் அறிவித்துள்ளனர்.கடந்த முறை தொப்பி சின்னத்தில் தினகரன் ஆர்கே நகரில் களமிறங்கினார். ஆனால், அதிகளவு பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க