• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அதிகாரபூர்வ அறிவிப்பு

November 30, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பன்னீர்செல்வம் அணி சார்பில் கட்சியின் அவைத்தலைவர், மதுசூதனன் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதேசமயம் முதல்வர் பழனிசாமி தரப்பில், சீட் கேட்டு, பலர் நெருக்கடி கொடுத்தனர். இதனால், முதன்முறையாக இடைத்தேர்தலுக்கு, கட்சியினரிடம் இருந்து விருப்ப மனு வாங்கப்பட்டது. அப்போது, அமைச்சர் ஜெயக்குமாரின் தீவிர ஆதரவாளர்களான பாலகங்கா, கோகுலஇந்திரா உட்பட மொத்தம் 27 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், ஆர்கே நகர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக சென்னையில் அதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், வளர்மதி, மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர். அதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் மதுசூதனன் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மதுசூதனனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே பாலகங்கா வெளியேறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க