• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஷால் வேட்புமனு விவகாரத்தில் திடீர் திருப்பம்

December 8, 2017 தண்டோரா குழு

எங்களை யாரும் மிரட்டவில்லை என விஷாலுக்கு ஆதரவாக முன்மொழிந்த இருவரும் தேர்தல் அலுவலருக்கு முன் ஆஜராகி விளக்கமளித்தனர்.

ஆர்.கே நகரில் போட்டியிடும் விஷால் மனு கையெழுத்து குளறுபடியால் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில் தனக்கு ஆதரவாக முன்மொழிந்தவர்களை ஆளும் கட்சியினர் மிரட்டியதாக விஷால் கூறியிருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் முறையிட்டிருந்தார்.

இந்நிலையில், எங்களை யாரும் மிரட்டவில்லை என விஷாலுக்கு ஆதரவாக முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கமளித்தனர். மேலும், விஷால் தங்கள் கையெழுத்தை போலியாக பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், விஷாலை முன்மொழியவில்லை என்று சுமதி, தீபன் அளித்த வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.விஷால் மீது புகார் அளிக்கப்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேலும் படிக்க