• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

70 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 251 ரூபாய் ஸ்மார்ட் போன்களை டெலிவரி செய்த ரிங்கிங் பெல்ஸ்

August 4, 2016 தண்டோரா குழு

உலகின் மலிவு விலை ஸ்மார்ட் போன் என்று புகழப்படும் ரிங்கிங் பெல்ஸ், சுமார் 65 ஆயிரம் செல்போன்களை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யத் துவங்கியுள்ளது. இதன் மூலம், சாத்தியமில்லை என்று கூறப்பட்ட ஒன்றைச் சாத்தியமாக்கி காண்பித்துள்ளது அந்த நிறுவனம்.

251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் தருகிறோம், முன்பதிவு செய்யுங்கள் என்று ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கூறியபோது, அது ஏமாற்றுவேலை என்று தான் பலரும் நினைத்தனர். அதற்கு அரசாங்கமும் கெடுபிடி செய்தது. இதனால் சிறிது காலம் சத்தமின்றி இருந்த அந்த நிறுவனம், பல தடைகளை தாண்டி தற்போது நமது இல்லங்களின் கதவை தட்டத் துவங்கியுள்ளது.

வட இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ள ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடுத்தர, ஏழை மக்களும் இந்த ஸ்மார்ட் போனை பயன்படுத்த வேண்டும் என்பது தான் தங்களுடைய நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், கேஷ் ஆன் டெலிவரி எனப்படும், பொருளைப் பெற்ற பிறகு பணத்தை செலுத்தும் வசதி உள்ளதால், பண மோசடிக்கு வாய்ப்பில்லை. மேற்கு வங்காளம், ஹரியானா, ஹிமாச்சல பிரதேஷ், பீகார், உத்தராகண்ட், டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் போன் சப்ளை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களில் குலுக்கல் முறையில் தேர்வானவர்களுக்கு இந்தப் போனை முதலில் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எஞ்சிய வாடிக்கையாளர்களுக்கும் விரைவில் போன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் செல்போன் தயாரிக்கப்படுவதாகவும், எனவே மலிவு விலையில் செல்போனை தர முடிகிறது என்றும் அந்த நிறுவனம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க