• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நதிநீர் இணைப்புக்காக பணம் கொடுத்துக் காத்திருக்கும் ரஜினி

June 27, 2016 தண்டோரா குழு

நதிநீர் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் நிதி அப்போதே வங்கியில் வைப்பு நிதியாக டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாகவும் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார்.

கபாலி படத்தை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் ரஜினி தற்போது அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார். சமீபத்தில் ரஜினியின் உடல்நிலை குறித்து சமூகவலைத்தளத்தில் பல்வேறு செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா கோவில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினி பூரண உடல் நலத்துடன் அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் ரஜினி இந்தியா திரும்ப உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், கபாலி சிறப்பாக தயாராகி உள்ளதாகவும் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

நதி நீர் இணைப்புக்காக ரஜினி அளித்த ஒரு கோடி நிதி குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, ரஜினி கொடுப்பதாக உறுதியளித்த ஒரு கோடி ரூபாய் நிதி அப்போதே வங்கியில் வைப்பு நிதியாக டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாகவும், அரசு நதி நீர் இணைப்பு திட்டத்தை தொடங்கும் போது அந்த நிதி உரியவர்களிடம் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க