• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

சமூக வலைதளங்களில் மனம் புண்படும்படி விமர்சிக்காதீர்கள் – ரஜினி

October 28, 2017 தண்டோரா குழு

சங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் மிக பிரமாண்ட முறையில் உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தின் இசை வெளியீடு துபாயில் பிரம்மாண்டமாக நேற்று துபாயில் நடந்தது.

அப்போது விழாவில் பேசுகையில்,

இந்தியாவில் இப்படி ஒரு படம் இனி வருமா என்பது கூறமுடியாது. ஆனால் ஷங்கரால் நிச்சயம் அது முடியும். நாமே 2.0 ஹாலிவுட்டை மீறிய படம் என கூறிக்கொள்வது தண்டோரா அடிப்பது போல் உள்ளது. படம் பார்த்த பிறகு அதை நீங்கள் உணர்வீர்கள்”. கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. இளைஞர்கள் வாழ்க்கையில் இன்புற வேண்டுமென்றால், நமது கலாச்சாரத்தையும், மரபையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், நல்ல படங்களை ஆதரியுங்கள். நல்ல கலைஞர்களை உற்சாகப்படுத்துங்கள். படம் சுமார் என்றோ, நன்றாக இல்லை என்றோ சோசியல் மீடியாவில் விமர்சிக்காதீர்கள். விமர்சிப்பதை தவிர்த்துவிட்டு, திரைத்துறையை இளைஞர்கள் மதிக்க வேண்டும்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

மேலும் படிக்க