• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ராஜஸ்தானில் பாதுகாப்புபடை காவலராக திருநங்கை நியமனம்

November 14, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலத்தில் திருநங்கை கங்கா குமாரி முதல்முறையாக பாதுகாப்புபடை காவலராக
பதவியேற்கவுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜாக்ஹாரி கிராமத்தை சேர்ந்தவர் கங்கா குமாரி(24). இவர் ஒரு திருநங்கை. கடந்த 2013ம் ஆண்டு, ராஜஸ்தான் காவல்துறையில் 12,178காவலரை ஆட்சேர்ப்புகான விளம்பரம் வெளியானது. அந்த பணிக்கு சுமார் 1,25,000 பேர் தேர்வு எழுதினர். அப்போது 22 வயதான கங்கா குமாரியும் தேர்வு எழுதினார். தேர்விலும் உடல் பரிசோதனையிலும் வெற்றி பெற்றார். ஆனால்,உடல் பரிசோதனை முடிவு வெளியானபோது, அவர் ஒரு திருநங்கை என்று தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு காவலர் பணி வழங்கப்படவில்லை.

இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருடைய வழக்கை விசாரித்த நீதிபதி,அவரை பணியில் சேர அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் பாதுகாப்பு படை காவலராக பொறுப்பேற்கவுள்ளார்.

கடந்த 2௦15ம் ஆண்டு, திருநங்கை சமூகத்தை மூன்றாவது பாலினமாக உச்சநீதிமன்ற ஒப்புக்கொண்டு, அவர்களுடைய சமூக மற்றும் பொருளாதார போராட்டத்தை கருத்தில்கொண்டு, அவர்களுக்கு கல்வி நிறுவனம் வேலைவாய்ப்புகளில் சிறப்பு ஒதுக்கீடு தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க