• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி யில் ரூ1 கோடி வரதட்சணை கேட்டதால், திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

December 5, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தானில் 1 கோடி ரூபாய் வரதட்சணை கேட்டதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின்,கோடா நகரை சேர்ந்தவர் டாக்டர் அனில் சக்சேனா. அவருடைய மகளுக்கும், உத்தர பிரதேஷ் மாநிலத்தின் மொராதாபாத் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசியராக பணிபுரியும் டாக்டர் சாக்சம் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில்,திருமண நாளன்று, மணமகன் வீட்டார், மணபெண்ணின் பெற்றோரிடம் 1 கோடி ரூபாய் வரதட்சணையாக தரவேண்டும் என்று கேட்டுள்ளனர். இதை கேட்ட பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து மணப்பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். உடனே அவர், மணமகனிடம் பேசியுள்ளார். ஆனால், மணமகன் வரதட்சணை தருவது குறித்து பிடிவாதமாக இருந்ததை அடுத்து, மணப்பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார்.

ஏற்கனவே,நிச்சியதார்த்ததின் போது, மணமகனுக்கு கார், 5 தங்க நாணயங்கள் மற்றும் 30 முதல் 35 லட்சம் வரை வரதட்சணை கொடுத்திருந்த நிலையில்,1 கோடி ரூபாய் கேட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

மேலும்,இச்சம்பவம் குறித்து மணப்பெண்ணின் வீட்டார்,காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அவர்களுடைய புகாரை ஏற்று கொண்டு,காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிகின்றனர்.

மேலும் படிக்க