• Download mobile app
16 Feb 2025, SundayEdition - 3294
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறந்தவர்கள் அடையாளம் கண்டுபிடிப்பு

September 8, 2016 தண்டோரா குழு

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே விபத்தில் இறந்தவர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவே பரவலாக பேசிவந்த சுவாதி கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று மீண்டும் ஓர் துயரச் சம்பவம் நடைபெற்றது.அந்த ரயில் இணையத்தில் இருந்து சற்று தொலைவில் ரயில் பாதை ஓரமாக நான்கு இளைஞர்கள் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரயில் அவர்கள் மீது மோதியதில் அவர்கள் நால்வரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனாலும் அங்குச் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவர்களது உடைமையில் பழைய துணிகள் மட்டுமே இருந்ததால் யார் எனக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தது. பின்னர் நடத்திய விசாரணையில் அங்குச் சிதறிக்கிடந்த பொருட்களில் இருந்த ஒரு வாக்காளர் அடையாள அட்டையை வைத்து அவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.

பின்னர் தீவிர விசாரணை நடத்தி அவர்கள் மொசைக் வேலை செய்வதற்காக வந்து நுங்கம்பாக்கத்தில் தங்கியிருந்ததும் நேற்று வேலை இல்லாததால் வேறு இடத்திற்குச் செல்ல முயன்ற போது அனைவரும் ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஒரிசா மாநிலத்தில் உள்ள அவர்களது உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க