• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல் காந்தி

October 12, 2017 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, தவறுதலாக பெண்கள் கழிவறைக்கு சென்றதால் தர்மசங்கடம் அடைந்தார்.

குஜராத் மாநிலத்திலுள்ள சோட்டா உதய்பூரில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இளைஞர்களிடையே கலந்துரையாடிகொண்டிருந்தார். அதன் பிறகு, அவசரமாக கழிவறைக்கு சென்றார். ஆண்களையும் பெண்களையும் வித்தியாசப்படுத்தும் விதமாக கழிவறையில் படங்கள் இல்லை. கழிவறைக்கு வெளியே ‘மகளிர் கழிவறை’என்று குஜராத்தி மொழியில் எழுதப்பட்டு இருந்தது. ராகுல்காந்திக்கு குஜராத்தி மொழி தெரியாததால், அவர் தவறுதலாக உள்ளே நுழைந்தார்.

அவர் தவறுதலாக மகளிர் கழிவறைக்கு சென்றதை கவனித்த அவருடைய காவலர்கள்,உடனே அவரை வெளியே அழைத்து வந்தனர். அவருக்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது.கழிவறைக்கு வெளியே எழும்பிய குழப்பல் சத்தம் கேட்டு, அங்கு வந்தவர்களை ராகுல்காந்தியின் பாதுகாவலர்கள் அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டனர்.

தவறுதலாக மகளிர் கழிவறைக்குள் சென்றுவிட்டு, வெளியே வந்தராகுல் காந்தியை பார்த்த மக்கள் சிரித்தனர். அந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்கள் கைபேசியில் பதிவு செய்தனர்.

மேலும் படிக்க