• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்கும் புதிய திட்டம்

October 24, 2017 தண்டோரா குழு

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில், கடந்த 2002-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் மற்றும் பிஸ்கட் வழங்கும் திட்டம், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரால் தொடங்கப்பட்டது.

இதனிடையே, புதுச்சேரி அரசின் கடும் நிதிப் பற்றாக்குறை காரணமாக, கடந்த 2013-ம் ஆண்டு இத்திட்டம் நிறுத்தப்பட்டது.பின்னர் சில மாதங்கள் கழித்து,தற்போது 12-ம் வகுப்பு வரை காலை நேரத்தில் பால் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முதலமைச்சர் நாராயணசாமி தீவிரமாக முயற்சி செய்து வந்தார்.இதனையடுத்து முதல்கட்டமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டியாக பிஸ்கட் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

பெங்களூரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்களுக்கு மட்டும் முதல் கட்டமாக இலவச பிஸ்கட் வழங்கப்பட உள்ளது.

மேலும் படிக்க