• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி

January 13, 2018 தண்டோரா குழு

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளின் விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட ரூ 19.42 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.மேலும்,விவசாய கடன் தள்ளுபடி செய்வதன் மூலம் 4,094 விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டாக கடும் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வேளாண்மற்றும் அதை சார்ந்த தொழில்களுக்காக விவசாய கூட்டுறவு வங்கி, சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கடன்களை அவர்களால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில்,இந்த கடன் சுமையில் இருந்து விவசாயிகளை விடுவிக்கவும், அவர்கள் புதிய கடன்களை பெற்று விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து மேற்கொள்ளவும், வேளாண் கூட்டுறவு கடன் நிறுவனங்களிடம் விவசாயிகளால் பெறப்பட்ட கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் படிக்க