• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முத்தம் கொடுத்த கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி கைது !

September 24, 2018 தண்டோரா குழு

டெல்லியில் எட்டுமாத கர்ப்பிணி,தனது கணவரை முத்தமிடும் போது அவரது நாக்கை கடித்து துண்டாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரங்கோலா பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசித்து வருபவர் கரண்சிங்.பெயிண்டிங் வேலை செய்து வரும்,இவருக்கும் காஜல் (22 வயது) என்ற பெண்ணிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.கரண்சிங் மனைவி காஜல் எட்டு மாதா கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்நிலையில்,கடந்த சனிக்கிழமை இரவு இத்தம்பதியினர் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.அப்போது கரண்சிங்கின் பெற்றோர் தலையிட்டு அவர்களது சண்டையை தீர்த்து வைத்தனர்.பின்னர் இருவரும் சமாதானம் ஆன நிலையில் கணவரை முத்தமிட்ட காஜல், கரணின் நாக்கை துண்டாக்கும் அளவிற்கு கடித்துள்ளார்.நாக்கு பாதி துண்டான நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட கரண்சிங் அலறியுள்ளார்.

இதையடுத்து இச்சம்பவத்தை கண்ட அவரது பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் ஜப்தர்சங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இதற்கிடையில்,அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,இனி இவரால் பேச முடியுமா என்பது சந்தேகம் என்று சொல்லிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கர்ப்பிணி பெண்ணான காஜலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க