• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராம்குமார் உடல் பரிசோதனை குழுவில் சுதிர் குப்தா நியமனம்

September 30, 2016 தண்டோரா குழு

ராம்குமார் உடல் பரிசோதனை குழுவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராம்குமாரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவர் குழுவில் தனியார் மருத்துவர் இடம் பெற அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 18-ம் தேதி புழல் சிறையில் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதை ஏற்க மறுத்த அவரது தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனியார் மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை நடைபெற வேண்டும் என்று கூறப்பட்டது. அதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர், 5 பேர் அடங்கிய டாக்டர்கள் குழுவில் இடம்பெறுவார் என்று உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்துப் பரமசிவம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அம்மனுவை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவித்த குழுவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சுதிர் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாளை ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க