• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிளாஸ்டிக் கூடையில் வாழும் பெண்

July 26, 2016 தண்டோரா குழு

நைஜீரியாவின் கானோவைச் சேர்ந்தவர் ரஹ்மா ஹருனா. பிறந்த 6 மாதத்தில் வாதநோயால் பீடிக்கப்பட்டதால் கைகளும், கால்களும் வளராமல் ஊனமாகவே 19 ஆண்டுகளாகத் துயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

காய்ச்சலில் தொடங்கி, வயிற்றுவலி, கால்வலி, கைவலி, உடல் வலி எனப் பரவி ரஹ்மாவை முழுவதும் முடக்கிவிட்டது என்று அவரது தாய் வாடி தெரிவித்தார்.

முற்றிலும் மற்றவரின் துணையோடுதான் வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார் ரஹ்மா. அவரது சகோதரர் ஃபஹட், குளிக்க வைப்பதிலிருந்து அனைத்து உதவிகளையும் அன்போடு செய்வதும், தாய் அவரை ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்து எங்குச் செல்லும்போதும் தூக்கிச்செல்வதும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அவர் மீது வைத்துள்ள அன்பிற்கு உதாரணமாகும்.

மற்றவர் ரெஹ்மாவிற்கு உதவிகள் செய்யும் போது தான் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும், உறவினர்களைச் சந்திப்பதில் ரெஹ்மா மகிழ்ச்சியடைவதாகவும், பல சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டிருந்தாலும், மூல காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவரது சகோதரர் கருத்துத் தெரிவித்தார்.

இஸ்லாமிய புராணங்களில் கூறப்படும் அமானுஷ்ய சக்தி போன்ற ஏதோ பீடித்திருக்கலாம் என்றும் சிலர் தெரிவித்தனர். ரெஹ்மாவின் குடும்பத்தினர் அனைவரும் இவரது நோயைக் குணப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இவரது தந்தை ஹுச்சைனி அவரது உடமைகள் அனைத்தையும் விற்று 15 வருடங்களாகச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இதுவரை ஒரு மில்லியன் நைரா வரை செலவு செய்திருப்பதாகவும், தொண்டு நிறுவனங்களை உதவிக்கு அணுகியுள்ளதாகவும், சிறந்த மருத்துவ நிபுணர்களின் அறிவுரையை அனுகவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

உதாரகுணம் படைத்த பலரும் பலவித உதவிகளை ரெஹ்மாவிற்கு அளிக்க முன்வந்துள்ளனர். எளிதாகப் பயணம் செய்யும் வண்ணம் ஒரு சக்கரநாற்காலியை ஒருவர் வழங்கியுள்ளார்.

எத்தனை வலிகள் இருந்த போதும், தனது லட்சியத்தை உறுதியாக அடைய ரெஹ்மா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

மக்கள் அனைத்துப் பொருட்களையும் வாங்க வசதியாக ஒரு மளிகைக்கடை துவங்குவதே இவரது லட்சியம். மனதில் உறுதியிருந்தால் வானத்தையும் வளைக்கலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

மேலும் படிக்க