• Download mobile app
24 Mar 2025, MondayEdition - 3330
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருட்டு விசிடி விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு

September 27, 2016 தண்டோரா குழு

திருட்டு விசிடி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி விஜய் நற்பணி இயக்கத்தினர் கோவை மாநகர காவல் ஆனையரிடம் புகார் மனு அளித்தனர்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த தொடரி மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகிய ஆண்டவன் கட்டளை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆன்லைன் மூலம் தரவிறக்கம் செய்யபட்டு திருட்டு விசிடிகள் தயாரிக்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதிச்சேரி கடைகளில் அமோகமாக இந்த திருட்டு விசிடிகள் விற்கபட்டு வருவதால் பலகோடி ரூபாய் செலவழித்து எடுக்கபடும் திரைப்பட தொழில் நசிந்து வருவதாக விஜய் நற்பணி இயக்கதினர் தெரிவித்தனர். மேலும் பொதுநலன் கருதி சைபர் கிரைம் போலீஸார் உரிய விசாரனை நடத்தி துரித நடவடிக்கை எடுப்பதன் மூலம் திருட்டு விசிடி விற்பனையை தடுத்து நிறுத்த முடியும் எனக்கோரி நடிகர் விஜய் நற்பணி இயக்கத்தினர் கோவை மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமையில் 20கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆனையர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்தனர்.

மேலும் படிக்க