உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக மாற்றி, ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை உடற்கல்வி ஆசிரியர்களும் ஊக்க ஊதியம் பெற தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணை வெளியிடப்படுவதற்குப் பாடுபட்ட, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆரோக்கியசாமி அவர்களுக்குப் பாராட்டு விழா கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவின் போது தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
பின்னர், பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தின்படி அனைத்து நிலை உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றம் செய்து, ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்;, மத்திய அரசு ஊதியக்குழு பரிந்துரையை தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் சங்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்டன.
இந்த பாராட்டு விழாவில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு