• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக்க கோரிக்கை

November 26, 2016 தண்டோரா குழு

உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக மாற்றி, ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை உடற்கல்வி ஆசிரியர்களும் ஊக்க ஊதியம் பெற தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணை வெளியிடப்படுவதற்குப் பாடுபட்ட, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆரோக்கியசாமி அவர்களுக்குப் பாராட்டு விழா கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவின் போது தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

பின்னர், பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தின்படி அனைத்து நிலை உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றம் செய்து, ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்;, மத்திய அரசு ஊதியக்குழு பரிந்துரையை தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் சங்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்டன.

இந்த பாராட்டு விழாவில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க