• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிக கட்டணம்: ஆம்னி பஸ்களுக்கு ரூ. 8.32 லட்சம் அபராதம்

October 31, 2016 தண்டோரா குழு

கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகளிடமிருந்து வந்த புகாரை அடுத்து, 527 ஆம்னி பேருந்துகளின் மீது மொத்தம் ரூ. 8,32,700 அபராதம் விதிக்கப்பட்டது. கோவையில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற பொதுமக்களின் குற்றசாட்டைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 26 முதல் அக்டோபர் 31 வரை கூடுதல் போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து, கோவை கூடுதல் போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அக் 26 முதல் அக் 31 வரை 3874 ஆம்னி பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் விதிமுறைகளை மீறி செயல்ப்பட்ட 527 பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூபாய் 8,32,700 அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையில் இது வரை ருபாய் 2,78,550 வசூலிக்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகை செலுத்தாத ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதே போல் பண்டிகைக் கால சிறப்பு தனியார் பேருந்துகளை இயக்க வசூலிக்கப்பட்ட வரி ருபாய் 95,160 என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பண்டிகைக் கால விடுமுறையின் போது ஆம்னி பேருந்துகள் மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்திவிடுகின்றன. இதனை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க