November 16, 2017
தண்டோரா குழு
பேரறிவாளன் கேட்பது கருணை அல்ல நீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், 26 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்திற்கு தீர்ப்பு வழங்கபட்டுவிட்டது.
தீர்ப்பு குறித்து கருத்து சொல்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். பேரறிவாளன் மன்னிப்பு கோரும் பட்சத்தில் அவர் விடுதலையை தான் ஆதரிப்பதாகவும் கருணை அடிப்படையில் அவர் விடுதலை செய்யபட்டால் அது தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், நினைவில் கொள்ளுங்கள் பேரறிவாளன் இப்போது கேட்பது கருணை அல்ல நீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.