• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு உடல் பரிசோதனை

November 13, 2017 தண்டோரா குழு

பரோல் முடிந்து முதன் முறையாக பேரறிவாளன் உடல் பரிசோதனைக்காகவும் சிறுநீர் தொற்று பிரச்சனைக்காகவும் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு கடந்த சில வருடங்களாக சிறுநீர் தொற்று நோய் உள்ளது. அதனால் மாதத்திற்கு ஒரு முறை மருத்துவனைக்கு அழைத்துவரப்படுவார். இந்தநிலையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் இரண்டு மாத பரோலில் சென்றபோது வீட்டிலையே மருத்துவ சிகிச்சை பெற்றார்.பின்னர் பரோல் முடிந்து கடந்த மாதம் 24 தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று பரோல் முடிந்து முதன் முறையாக பேரறிவாளன் உடல் பரிசோதனைக்காகவும் சிறுநீர் தொற்று பிரச்சனைக்காகவும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார். பின்னர் மருத்துவர் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின் அவருக்கு ரத்த பரிசோதனை,சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துசெல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க