• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு உடல் பரிசோதனை

November 13, 2017 தண்டோரா குழு

பரோல் முடிந்து முதன் முறையாக பேரறிவாளன் உடல் பரிசோதனைக்காகவும் சிறுநீர் தொற்று பிரச்சனைக்காகவும் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு கடந்த சில வருடங்களாக சிறுநீர் தொற்று நோய் உள்ளது. அதனால் மாதத்திற்கு ஒரு முறை மருத்துவனைக்கு அழைத்துவரப்படுவார். இந்தநிலையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் இரண்டு மாத பரோலில் சென்றபோது வீட்டிலையே மருத்துவ சிகிச்சை பெற்றார்.பின்னர் பரோல் முடிந்து கடந்த மாதம் 24 தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று பரோல் முடிந்து முதன் முறையாக பேரறிவாளன் உடல் பரிசோதனைக்காகவும் சிறுநீர் தொற்று பிரச்சனைக்காகவும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார். பின்னர் மருத்துவர் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின் அவருக்கு ரத்த பரிசோதனை,சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துசெல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க